சென்னை மழை வெள்ளம்.. கோப்புப்படம்
தமிழ்நாடு

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை! நாளை முதல் தீவிரமடையும்!!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கும் மழை நாளை தீவிரமடையத் தொடங்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பிற கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மழை அதிகரிக்கும். அக்டோபர் 15 - 18 முதல் மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும்.

கடலில் இருந்து மேகங்கள் நகர்வது ஒரு அழகான காட்சி. இன்று திடீர் மழையை அனுபவியுங்கள். சிறிய மேகங்கள்கூட 20-30 மிமீ மழையைப் பொழியும்.

தூத்துக்குடி முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்களில் வசிப்போர் இன்று முதல் அலுவலகத்திற்குச் செல்லும்போது குடை / ரெயின்கோட் எடுத்துச் செல்வது அவசியம்.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் ஒருநாளே இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வருகிற அக். 16 - 18 தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Rain in 4 districts including Chennai today, Will intensify from tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

கேரள முதல்வர் வேட்பாளராக சசி தரூர்..? ராகுல், கார்கேவுடன் சந்திப்பு!

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

SCROLL FOR NEXT