ENS
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரம்.. இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வானிலை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக். 16 - 18 தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று முதல் தொடங்கும் மழை நாளை முதல் தீவிரமடையும் என்றும் நாளை பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு, இன்று பிற்பகல் 1 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

TN rain update for next 3 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது: பிரேன் சிங்

ஓஜி ஓடிடி தேதி!

முதல்முறையாக ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தேர்வான ஆப்பிரிக்க நாடு..! 5 லட்சம் மக்கள் தொகை!

டிஜிட்டல் மோசடியில் இந்தியர்கள் இழந்த ரூ.23,000 கோடி!

காதலில் விழுந்த கன்னி... அனுஷ்கா சென்!

SCROLL FOR NEXT