கோப்புப் படம்
தமிழ்நாடு

பேரவையில் தரையில் அமர்ந்து இபிஎஸ் தர்னா!

பேரவையில் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதுடன், வெளிநடப்பு செய்தனர்

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அமைச்சர் சிவசங்கர் பேசிய நிலையில், அதனை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

மேலும், பேரவையில் தரையில் அமர்ந்து தர்னாவிலும் அதிமுகவினர் ஈடுபட்டனர். இதனிடையே, தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா? இல்லையா? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, இருக்கையில் அமர்ந்து கேள்விகளை எழுப்புமாறு அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் கூறினார்.

இதனிடையே, அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை வெளியேற்ற அவைக் காவலர்களை பேரவைத் தலைவர் அழைத்த நிலையில், அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிக்க: தூத்துக்குடி Vs கள்ளக்குறிச்சி! மு.க.ஸ்டாலின், இபிஎஸ் இடையே அனல்பறந்த விவாதம்!

TN Assembly: AIADMK party walked out today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூரில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் திருப்பம்: கணவரால் மயக்க மருந்து செலுத்திக் கொல்லப்பட்டாரா?

மழை நின்றது: பாகிஸ்தான் வெற்றிபெற 113 ரன்கள் இலக்கு!

பாக். போலியோ பணியாளர்கள் மீது மீண்டும் தாக்குதல்! காவல் அதிகாரி சுட்டுக்கொலை!

புதுவைக் கடலில் டால்பினுடன்... சஞ்சனா திவாரி!

எனதருமை ரத்தங்களே... அரசன் புரோமா பார்த்த சிம்பு உற்சாகம்!

SCROLL FOR NEXT