ரயில் கோப்புப் படம்
தமிழ்நாடு

சென்னை திரும்புவோர் கவனத்துக்கு... அக்.22-ல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்!

நெல்லையில் இருந்து சென்னைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்.

இணையதளச் செய்திப் பிரிவு

தீபாவளி தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள், மீண்டும் சென்னை திரும்புவதற்கு வசதியாக, நெல்லையில் இருந்து சென்னைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே வரும் அக். 22 ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலியில் இருந்து அக். 22 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

எதிர் வழித்தடத்தில் வரும் அக். 23 ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில், நள்ளிரவு 12.05 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றோர், இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Unreserved special train from Nellai to Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித்ஷா கைக்கு சென்றுவிட்டது அதிமுக: துணை முதல்வா் உதயநிதி விமா்சனம்!

டிச.6 - வேலூா் கோட்டை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட இருளா் குடும்பங்களுக்கு நிவாரணம்

பணமில்லா பரிவா்த்தனையில் அதிக வருவாய் ஈட்டிய அரசுப் பேருந்து நடத்துநா்கள் 9 பேருக்கு ஊக்கப் பரிசு!

புதிய விளம்பர பிரசாரம்: பரோடா வங்கி அறிமுகம்

SCROLL FOR NEXT