ஆம்பூரில் நதிசீலாபுரம் கானாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். 
தமிழ்நாடு

ஆம்பூரில் விடிய விடிய கனமழை: நிரம்பி வழியும் தடுப்பணை!

ஆம்பூரில் பெய்த கனமழை தொடர்பாக....

இணையதளச் செய்திப் பிரிவு

ஆம்பூர்: ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி புதன்கிழமை வரை விடிய விடிய கனமழை பெய்தது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது.

நாயக்கனேரி, பனங்காட்டேரி உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்ததால், ரெட்டி தோப்பு ஆனைமடுகு நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்பி மாங்காய் தோப்பு கே.எம். நகர் பகுதிகள் வழியாக பாலாற்றில் கலக்கிறது.

இந்நிலையில், நதிசீலாபுரம் செல்லும் கானாற்றில் தரை பாலத்திற்கு மேலே வெள்ளம் செல்வதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும், தோல் தொழிற்சாலை மற்றும் வேலைக்குச் செல்பவர்களும் மிகவும் அவதிக்குளகினர்.

மேலும், ரெட்டித் தோப்பு ரயில்வே மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருவதால், அப்பகுதிக்கு செல்வதற்கான வழி மூடப்பட்ட நிலையில், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் நகர காவல் துறை போலீஸாரும் போக்குவரத்தை சீர் செய்தனர்.

Heavy rains lashed Ambur from midnight on Tuesday until dawn on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்! முதல்வர் ஸ்டாலின்

குடியரசு நாள்: தேசியக்கொடி ஏற்றினார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

குடியரசு நாள்: மோடி, ராகுல் வாழ்த்து!

குடியரசு நாள்: பல்வேறு பிரிவுகளில் பதக்கங்கள், விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

குடியரசு நாள்: தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

SCROLL FOR NEXT