பிரதிப் படம் 
தமிழ்நாடு

மோந்தா புயல்! ஆந்திரம் - சென்னை விமானங்கள் ரத்து!

மோந்தா புயல் எதிரொலியாக ஆந்திரத்தில் இருந்து சென்னை வரும் 6 விமானங்கள் ரத்து

இணையதளச் செய்திப் பிரிவு

மோந்தா புயல் எதிரொலியாக சென்னை மற்றும் ஆந்திரம் இடையிலான 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

வங்கக்கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல், இன்று காலை தீவிரப் புயலாக வலுப்பெறும் நிலையில், இது ஆந்திர மாநில கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், சென்னையிலிருந்து ஆந்திரம் செல்லும் 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மோந்தா புயல், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையில் இன்றிரவு கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது மசூலிப்பட்டினத்தில் இருந்து 230 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.

புயலின் காரணமாக, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஆந்திர கடலோரப் பகுதி வழியாகச் செல்லும் பல ரயில்களின் புறப்பாடு நேரம் மாற்றம் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: சென்னை உள்பட 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(அக்.28) விடுமுறை!

Montha Cyclone: 6 Flights canceled ar Chennai airport

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர்யனுக்காக... ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

பழுப்பா, சிவப்பா? மேக்னா கௌர்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாளை தவெக நிர்வாகக் குழு கூட்டம்!

துறைமுகத்தில் 8ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு! பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படும் மக்கள்!

SCROLL FOR NEXT