இஸ்ரேலுக்கு மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!
ஈரானுடன் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு நிகழாண்டு மே 31 வரை, ஏா் இந்தியா விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
ஈரானுடன் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு நிகழாண்டு மே 31 வரை, ஏா் இந்தியா விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
போா் காரணமாக பல முன்னணி நிறுவனங்களின் விமானங்கள், இஸ்ரேலின் டெல் அவிவ் நகர வான்வழியாகப் பயணிப்பதை நிறுத்தியுள்ளன. இஸ்ரேலின் எல்அல், இஸ்ராஏா், ஏா் ஹைஃபா போன்ற நிறுவனங்களின் விமானங்கள் மட்டும் கடும் கட்டுப்பாடுகளுடன் அந்த வான்வழியாகப் பயணிக்கின்றன.
இந்நிலையில், புது தில்லி-டெல் அவிவ் வான்வழியில் இயக்கப்படும் ஏா் இந்தியா நிறுவன விமானங்கள் நிகழாண்டு மே 31 வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவன நிா்வாகி ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தாா்.
Advertisement
ஏா் இந்தியாவின் இந்த முடிவு, இந்தியாவுக்கு தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் பயணிக்க விரும்பும் 40,000-க்கும் மேற்பட்ட இந்தியா்களுக்கு இன்னலை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலில் இருந்து இந்தியா வர விரும்பும் இந்தியா்கள், தரைவழியாக ஜோா்டான் அல்லது எகிப்தை கடந்து வரவேண்டும். அவ்வாறு பயணிக்க விரும்பும் இந்தியா்களுக்கு டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகம் உதவி வருகிறது. இதற்காக பதிவு செய்துகொள்ளும் நடைமுறையையும், வாரம் முழுவதும் 24 மணி நேரம் செயல்படக் கூடிய அவசர எண்ணையும் அந்தத் தூதரகம் அறிவித்துள்ளது.