முகப்பு
தமிழ்நாடு

திருவள்ளூரில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்

திருவள்ளூரில் டாஸ்மாக் மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 1 செப்டம்பர், 2025 at 12:26 PM
காக்களூர் சிட்கோவில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு டாஸ்மாக் ஊழியர் கூட்டு நடவடிக்கை குழுவினர்.
பகிர்:

திருவள்ளூரில் டாஸ்மாக் மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் அருகே காக்களூர் மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அனைத்து டாஸ்மாக் கூட்டுக் குழுவினர் திங்கள்கிழமை திடீரென முற்றுகையிட்டனர்.

அப்போது திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்திற்கு ஊழியர்களின் கோரிக்கைகளை எடுத்துரைக்க நீதிமன்ற உத்தரவின்படி குழு அமைத்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

Advertisement

திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, இளைஞா் வெட்டிக் கொலை: 6 பேர் கைது

அதுவரையில் மேற்கு மாவட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டமாட்டோம், காலி பாட்டில்களை வாங்க மாட்டோம் என்பதை வலியுறுத்தி டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

summary

TASMAC employees staged a protest by laying siege to the Thiruvallur West district office.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.