வெடிகுண்டு மிரட்டல் 
தமிழ்நாடு

சென்னை தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தலைமைச் செயலகம் மற்றும் பாஜக அலுவலகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள்

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை, தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் குண்டு வைத்திருப்பதாக வந்த மின்னஞ்சல் மூலமாக வந்த தகவலின்பேரில், மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் தலைமைச் செயலகத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து செயலகத்தில் உள்ள அதிகாரிகள், பணியாளர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

தலைமைச் செயலகம் பகுதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போலீஸார் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தி.நகர் அருகேயுள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ஈஞ்சம்பாக்கத்தில் உள் தனியார்ப் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Police are investigating a bomb threat made to the Secretariat in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு: 81 ஆயிரத்தைக் கடந்தது!

செப். 11 இல் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் பங்கேற்பு

மேட்டூர் அணை நிலவரம்!

சமூக ஊடகங்களுக்கான தடை நீக்கம்: இயல்பு நிலைக்கு திரும்பும் நேபாளம்!

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT