கம்பம் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்!
கம்பம் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள்.
உத்தமபாளையம்: கம்பம் நகராட்சி நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இதில், 18 திமுக நகர மன்ற உறுப்பினர்கள், 6 அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார் ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து தீர்மான மனுவை கம்பம் நகராட்சி ஆணையரிடம் கொடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே நகர்மன்ற தலைவருக்கும், நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் தீர்மானம் நிறைவேற்றுவதிலும், கூட்டங்கள் நடத்துவதிலும் ஒற்றுமை இல்லாததால் பிரச்னைகள் அடிக்கடி வந்து கொண்டு இருந்தது.
Advertisement
Advertisement
கடந்த சில நாள்களுக்கு முன்பு நகர்மன்ற கூட்டம் நடைபெறும் பொழுது, எதிர்ப்பில் உள்ள 18 திராவிட முன்னேற்றக் கழக நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்தினார்கள்.
இது குறித்து, மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று(செப். 10) சுமார் 24 நகர்மன்ற உறுப்பினர்கள், ஆணையாளரிடம் நகர்மன்ற தலைவர் மற்றும் நகர்மன்ற துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அதற்குரிய மனுவை நகர்மன்ற ஆணையாளரிடம் அளித்தனர்.
மனு அளிக்கும் பொழுது, 18 திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் நகர்மன்ற உறுப்பினர்களும், 6 அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நகர்மன்ற உறுப்பினர்களும் தனித்தனியாக மனு அளித்தனர்.
ஆனால், அனைவரும் ஒன்றாக இணைந்து தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இது குறித்த மனு அளிக்க சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நகர்மன்ற தலைவரிடம் கேட்ட பொழுது, ”நாங்கள் அனைத்து செயலிலும் முறையாகத்தான் செய்து வருகிறோம். எங்கள் மீது நம்பிக்கை இல்லை, தீர்மானம் கொண்டு வந்தால் அதை நாங்கள் ஏற்க தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.
The ruling party and opposition municipal council members moved a no-confidence motion against the chairman and deputy chairman of the Cumbum Municipal Council.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.