முகப்பு
தமிழ்நாடு

ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் சாலைவலம்!

ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் சாலைவலம் மேற்கொண்டு வருகிறார்.

Updated On : 14 செப்டம்பர் 2025, 10:13 am IST
முதல்வர் ஸ்டாலின் சாலைவலம்
பகிர்:

ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் சாலைவலம் மேற்கொண்டு வருகிறார்.

அரசு விழாவில் பங்கேற்க கிருஷ்ணகிரிக்கு இன்று (செப்.14) வருகை தந்துள்ள முதல்வா் ஸ்டாலின் சாலைவலம் மேற்கொண்டு வருகிறார். சாலைவலத்தின்போது, கட்சினர் அவரை வரவேற்கும் வகையில் 12 மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழக முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களை சந்தித்துகொண்டே, கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலத்தில் இருந்து பெங்களூரு சாலை, சென்னை சாலை வழியாக விழா மேடைக்கு செல்கிறார்.

Advertisement

Advertisement

கிருஷ்ணகிரிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் வகையில், வழிநெடுகிலும் கொடிகள், திட்டங்கள் குறித்து பதாகைகளுடன், தொண்டர்கள் வரவேற்றனர்.

முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் 9.40 மணிக்கு சூர் தனேஜா ஏரோஸ்பேஸ் விமான நிலையத்தில் வந்தடைந்தார். அவருக்கு ஓசூர் எம்.எல்.ஏ பிரகாஷ் எம்எல்ஏ புத்தகம் கொடுத்து வரவேற்றார்.

அப்போது பர்கூர் எம்எல்ஏ மதியழகன், கிருஷ்ணகிரி மாவட்ட எம்.பி. கோபிநாத், ஓசூர் மேயர் எஸ். ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்த் உள்ளிட்டோர் புத்தகங்கள் வழங்கினர்.

ஓசூர் அருகே உள்ள அந்திவாடி சோதனை சாவடி, மத்திகிரி கூட்டுச்சாலையில் இளைஞர் அணி மற்றும் ஆதிதிராவிடர் நல குழு சார்பிலும், டிஎஸ்பி அலுவலகம் பகுதியிலும் மாநகரம் மற்றும் அணிகளின் சார்பிலும், ஆர்சி சர்ச் அருகில் மாநகரம் மற்றும் அப்பகுதி சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒசூரில் சாலைவலம் சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின், ஓசூர் நகரைக் கடக்க அவருக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது.

summary

Chief Minister Stalin is conducting a roadshow in Hosur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments