தமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ரூ.2,885 கோடியில் திட்டங்கள்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்த திட்டங்கள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 2,885 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டி, புதிய திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று(செப். 14) தொடக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி திடலில் இன்று(செப். 14) நடைபெறும் அரசு நிகழ்வில் பங்கேற்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் ஒசூர் வந்தடைந்தார்.

அங்கிருந்து சாலை வழியாக கிருஷ்ணகிரிக்கு வந்த முதல்வர், கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலத்திலிருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு வரை சாலைவலம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து மனுக்களைப் பெற்றார்.

பின்னர், முதல்வர் ஸ்டாலின் அரசு விழாவில் பங்கேற்று, புதிய திட்டங்கள் மற்றும் நிறைவடைந்த திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக தொடக்கிவைத்தார்.

அதில் 85,177 பேருக்கு பட்டாக்களையும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

முதல்வர் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும், 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Chief Minister Stalin today (Sept. 14) laid the foundation stone for projects worth Rs. 2,885 crore in Krishnagiri district and inaugurated new projects.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பர் மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

3 நாள்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால்.. நிகழும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஷ்ரேயாஸ் ஐயர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

இந்த நவம்பர் மாதம் எப்படியிருக்கும்?

SCROLL FOR NEXT