தமிழ்நாட்டையே முக்காடு போட வைப்பார்: இபிஎஸ் மீது பொன்முடி விமர்சனம்
அதிமுக 5 கட்சிகளாகப் பிரிந்து போயிருப்பதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி விமர்சனம்
அதிமுக 5 கட்சிகளாகப் பிரிந்து போயிருப்பதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.
கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசுகையில்,
``தமிழ்நாட்டைத் தலைகுனிய வைப்பதில் அதிமுகவின் நடவடிக்கை கொஞ்சம் நஞ்சமல்ல. அவர்களின் கட்சியே 5 கட்சியாகி விட்டது.
Advertisement
Advertisement
இது அண்ணா திமுக இல்லை; எடப்பாடி பழனிசாமி திமுக என்றுதான் சொல்ல வேண்டுமென்று டிடிவி தினகரனே சொல்கிறார்.
தில்லிக்குச் சென்று முக்காடு போட்டு வந்ததன் காரணம், தமிழ்நாட்டையே முக்காடு போட வைத்து விடுவேன் என்பதைத்தான் அவ்வாறு அறிவித்தார். அதுதான் உண்மை.
ஒன்றிலிருந்து ஐந்தான கட்சி, இனி எத்தனையாகப் போகும் என்று தெரியவில்லை. அவர்களுக்கு தமிழ்நாட்டை ஓரணியில் கொண்டுவர வேண்டும் என்றில்லை. அவர்களின் கட்சியையே ஓரணியில் கொண்டுவர முடியவில்லை’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: திமுக - தவெக போட்டியை ஏற்க முடியாது: நயினார் நாகேந்திரன்
Former Minister Ponmudy criticized ADMK
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.