சென்னையில் நாளை (செப்.25) 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா நடைபெறுவதையொட்டி அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெலங்கானா சென்று இந்த விழாவுக்கான அழைப்பிதழை முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் வழங்கி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக அரசு கல்வியில் செய்த சாதனைகள் குறித்து 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற கொண்டாட்ட விழா செப். 25 ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் தகவல் தெரிவித்தார்.
நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண், விளையாட்டு சாதனையாளர்கள் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கி நடைபெறும் இந்த சிறப்பு நிகழ்வில் அரசின் கல்வி சார்ந்த திட்டங்களில் பங்கேற்று பயன்பெற்றவர்கள் தங்களது அனுபவத்தை பகிர்வார்கள் என்றும் இதில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என்றும் கூறியிருந்தார்.
மேலும் இந்தாண்டுக்கான தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வும் நடைபெறும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செப். 25 ஆம் தேதி மாலை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இந்த விழா நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.