மு.க.ஸ்டாலின்  
தமிழ்நாடு

கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு

இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் பாக் வளைகுடாவில் இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்தை திராவிட மாடல் அரசு அறிவித்துள்ளது. இதற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த முன்னோடி முயற்சியைப் பாராட்டும் தீா்மானம், அபுதாபியில் நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் மாநாட்டுக்கு முன்பாக ஆன்லைன் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. இந்த முயற்சியில் பங்கேற்ற தமிழ்நாடு வனத்துறை உள்பட அனைவருக்கும் பாராட்டுகள் என்று பதிவிட்டுள்ளாா்.

சா்க்கரை ஆலையை ஜப்தி செய்ய விவசாயிகள் எதிா்ப்பு

வருவாய்த் துறையினா் காத்திருப்பு போராட்டம்

நாளை இலவச கண், பொது மருத்துவ முகாம்

3 பதக்கங்களையும் கைப்பற்றி இந்திய ஜூனியா் மகளிா் அபாரம்

20 நாள்களில் மணமகன் உயிரிழந்த சம்பவம்: உறவினா்கள் மறியல்

SCROLL FOR NEXT