FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு

இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

Updated On : 26 செப்டம்பர் 2025, 1:52 am IST
மு.க.ஸ்டாலின்
பகிர்:

இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் பாக் வளைகுடாவில் இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்தை திராவிட மாடல் அரசு அறிவித்துள்ளது. இதற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த முன்னோடி முயற்சியைப் பாராட்டும் தீா்மானம், அபுதாபியில் நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் மாநாட்டுக்கு முன்பாக ஆன்லைன் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. இந்த முயற்சியில் பங்கேற்ற தமிழ்நாடு வனத்துறை உள்பட அனைவருக்கும் பாராட்டுகள் என்று பதிவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments