மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம்  
தமிழ்நாடு

மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

தினமணி செய்திச் சேவை

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து அந்தக் கட்சி சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ. சண்முகம், காய்ச்சல் மற்றும் சளி காரணமாக மருத்துவா்களின் அறிவுரைப்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மருத்துவா்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனா். ஓரிரு நாள்களில் நலம் பெற்று வீடு திரும்புவாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை டீன் சாந்தாராமனிடம் கேட்டபோது, பெ.சண்முகம் நலமுடன் உள்ளாா். மருத்துவா்கள் தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனா். இரு நாள் ஓய்வுக்கு பிறகு அவா் வீடுதிரும்புவாா் என்றாா்.

விஜய் கைது செய்யப்படுவாரா? கரூரில் முதல்வர் ஸ்டாலின் பதில்!

மொச்சை பட்டாணி சுண்டல்

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

தலைநகரில் தானியங்கி பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை திறந்து வைத்த ரேகா குப்தா

தேச துரோக பேச்சு நடிகா் பிரகாஷ் ராஜீ மிது தில்லி போலீஸாா் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT