PTI
தமிழ்நாடு

அரசின் சிறப்பான நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன: கரூர் மாவட்ட ஆட்சியர்

கரூரில் இப்போது என்ன நிலவரம்? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்

இணையதளச் செய்திப் பிரிவு

அரசின் சிறப்பான நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு தெரிவித்தார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்க்ள் எண்ணிக்கை இதுவரை 40-ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், கரூரில் இன்று(செப். 28) செய்தியாளர்களுடன் பேசிய அவர், “கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட அரசு மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள் 220 பேர், செவிலியர்கள் 115 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.

மேலும், நாமக்கல், சேலம், திண்டுக்கல் திருச்சி, மதுரை, கோவையில் இருந்தும் 114 மருத்துவர்களும் 23 செவிலியர்களும் கரூர் வந்து சிகிச்சை அளித்தனர். தனியார் மருத்துவமனைகளில் பலர் சிகிச்சையில் உள்ளனர். அரசின் சிறப்பான நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு விரைந்து உடற்கூராய்வு செய்யப்பட்டு அவர்தம் உடல்கள் உரிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டோருக்கு உதவ கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

Many lives have been saved due to the government's swift action: Karur District Collector

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகம் புறம்... மேகா சுக்லா!

விஜய் பிரசாரத்துக்கு அனுமதியளிக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் மனு!

166 ஆண்டுகால சாதனையை முறியடித்த ராகுல் சஹார்! அறிமுகப் போட்டியில் 8 விக்கெட்டுகள்!

இறுதிப்போட்டி: பந்துவீச்சில் அசத்திய இந்தியா; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

ஒய்யாரம்... ஷிவானி!

SCROLL FOR NEXT