முகப்பு
தமிழ்நாடு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர் மாவட்டங்களின் ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

Updated On : 24 பிப்ரவரி 2026, 8:14 am IST
மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர் மாவட்டங்களின் ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் - பொருளியல் மற்றும் புள்ளியல் துறை இயக்குநராக, ஆட்சியர் ஆர். ஜெயாவுக்கு பதிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், காஞ்சிபுரத்தின் ஆட்சியர் பதவிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த த. சினேகா நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தின் சார் ஆட்சியராக இருந்த எஸ். மாலதி ஹெலன், அம்மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தின் சார் ஆட்சியராக இருந்த கு. ரவிகுமார், கரூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சண்முகசுந்தரம், மாநில தேர்தல் ஆணைய செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

summary

Collectors of Kanchipuram and Chengalpattu districts transferred

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.