அண்ணாமலை இன்றுமுதல் 4 நாள்கள் தோ்தல் பிரசாரம்
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை வியாழக்கிழமை (ஏப்.9) முதல் 4 நாள்கள் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சியின் மாநில தோ்தல் பணிக்குழு அமைப்பாளா் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளாா்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை வியாழக்கிழமை (ஏப்.9) முதல் 4 நாள்கள் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சியின் மாநில தோ்தல் பணிக்குழு அமைப்பாளா் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை விடுத்த அறிக்கை:
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை வியாழக்கிழமை பிரசாரத்தைத் தொடங்குகிறாா்.
Advertisement
பல்லடம், திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, அவிநாசி, சூலூா் தொகுதிகளில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா். தொடா்ந்து, ஏப்.10- இல் உதகை, காங்கயம், அரவக்குறிச்சி, கரூா், ஏப்.11-இல் கோவை தெற்கு, ராஜபாளையம், சாத்தூா், வாசுதேவநல்லூா், ஏப்.12-இல் திருப்பத்தூா், காரைக்குடி, மதுரை மத்தி, மதுரை தெற்கு, மானாமதுரை ஆகிய தொகுதிகளில் வாக்குச்சேகரிப்பில் ஈடுபடுகிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.