முகப்பு
தமிழ்நாடு

விஜய் ஆதரவுடன் முதல்வராக இபிஎஸ் திட்டம்; பதவியை விட்டுக்கொடுத்தேன்! செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் செங்கோட்டையன் பிரசாரம்...

Updated On : 9 ஏப்ரல், 2026 at 4:43 PM
விஜய்யுடன் செங்கோட்டையன் - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 4:16 PM

தவெக தலைவர் விஜய்யின் ஆதரவுடன் முதல்வராகி ரூ. 5,000 கோடி சம்பாதிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டதாக செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அக்கட்சியின் மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் போட்டியிடுகிறாா்.

முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்.

Advertisement

இந்நிலையில் இன்று கோபி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட செங்கோட்டையன் மக்கள் மத்தியில் பேசுகையில்,

"தவெக தலைவர் விஜய்யின் ஆதரவுடன் முதல்வராகி ரூ. 5,000 கோடி சம்பாதிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். அதனை நான் முறியடித்துவிட்டேன். அதனால் எடப்பாடி பழனிசாமி, என் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். அதனாலேயே என்னுடைய வேட்புமனு தாக்கல் மீது புகார் அளித்தார்கள். ஆனால் நான் 10 முறை வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறேன். எனக்கு தெரியாதா? 10 முறை தோல்வியடைந்த பழனிசாமி என்று கூறுகிறார்கள்.

அப்படிப்பட்ட அவர், 'துரோகி செங்கோட்டையனை வீழ்த்தி டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும், இங்கு வெற்றி விழா கொண்டாட வேண்டும்' என்று கூறுகிறார். யார் துரோகி? முதல்வர், பொதுச் செயலர் பதவியை இபிஎஸ்ஸுக்கு நான் விட்டுக்கொடுத்தேன். அதற்கான பரிசு இதுதானா? என்னால் அதிகாரத்தைப் பெற்றவர்கள் என்னை சாதாரண உறுப்பினராகக்கூட இல்லாமல் கட்சியை விட்டு அகற்றினார்கள்.

விசில் சின்னத்திலும் செங்கோட்டையனுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்" என்று பேசினார்.

summary

EPS Plans to Become Chief Minister with Vijay's Support: Sengottaiyan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.