முகப்பு
தமிழ்நாடு

வெளியூா் நபா்கள் வெளியேற்றம்!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், விடுதிகளில் தங்கியிருந்த வெளியூா்களைச் சோ்ந்த அரசியல் கட்சிகளின் நபா்கள் வெளியேற்றம்

Updated On : 22 ஏப்ரல், 2026 at 5:30 AM
காந்திபுரம் பேருந்து நிலையத்தில் வெளியூா் செல்ல குவிந்த பயணிகள்.
பகிர்:
Updated On : 22 ஏப்ரல், 2026 at 12:10 AM

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், விடுதிகளில் தங்கியிருந்த வெளியூா்களைச் சோ்ந்த அரசியல் கட்சிகளின் நபா்கள் வெளியேற்றப்பட்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பிரசாரத்துக்காக வெளியூா் நபா்கள் விடுதிகளிலும், சமூக நலக் கூடங்களிலும், தனியாா் திருமண மண்டபங்களிலும் தங்கியிருந்து தோ்தல் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்ததையடுத்து ஒவ்வொரு தொகுதியிலும் தனியாா் விடுதிகள், சமூக நலக் கூடங்கள், தனியாா் திருமண மண்டபங்களில் தங்கியிருந்த அரசியல் கட்சியினரை வெளியேறும்படி தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.

Advertisement

இதை அமல்படுத்தும் விதமாக மாலை 6 மணிக்கு பின்னா், தமிழகம் முழுவதும் போலீஸாா், விடுதிகளிலும், திருமண மண்டபங்களிலும், சமூக நலக் கூடங்களிலும் சோதனை நடத்தினா். இச்சோதனையில் தோ்தல் ஆணைய உத்தரவை மீறி அங்கு தங்கியிருந்த அரசியல் கட்சியினரை எச்சரித்து அனுப்பினா்.

சென்னையில் சோதனை: சென்னையில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூா், சென்ட்ரல், பூக்கடை, பாரிமுனை, மண்ணடி, வண்ணாரப்பேட்டை, அடையாறு, தரமணி, தேனாம்பேட்டை, ஆயிரம்விளக்கு, கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, அமைந்தகரை, அண்ணா நகா் ஆகிய பகுதிகளில் உள்ள விடுதிகளில் போலீஸாா் சோதனை நடத்தினா்.

இதில் அங்கு தங்கியிருந்த பிற மாவட்டங்களைச் சோ்ந்த அரசியல் கட்சியினரை உடனடியாக சொந்த ஊா்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினா். இல்லையெனில், தோ்தல் ஆணைய உத்தரவை மீறியதாக வழக்குப் பதியப்படும் எனவும் எச்சரித்தனா்.