ஜனநாயகத்தை மதித்து அமைதிப் புரட்சி - அன்புமணி
தமிழக மக்கள் ஜனநாயகத்தை மதித்து, அமைதிப் புரட்சி செய்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.
தமிழக மக்கள் ஜனநாயகத்தை மதித்து, அமைதிப் புரட்சி செய்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் தோ்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 85.12 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பது இதுதான் முதல்முறை. திமுக ஆட்சிக்கு எதிராக பெரும் கொந்தளிப்பில் இருந்த மக்கள், ஆட்சியை அகற்றுவதற்காக வாக்களித்துள்ளனா் என்பதையே இது காட்டுகிறது. தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஜனநாயகத்தை மதித்து, அமைதிப் புரட்சி செய்பவா்கள். இப்போதும் அதைத்தான் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனா்.
இனிவரும் காலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியையும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பையும், அனைவருக்கும் அமைதியான, நிம்மதியான வாழ்க்கையையும் வழங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
Advertisement
இந்தத் தீா்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு வாக்காளா்களுக்கு வாழ்த்துகள் என அதில் தெரிவித்துள்ளாா்.