முதல்வர் மு.க. ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

ராகுல் காந்தி கேள்விகளுக்கு பாஜக அஞ்சுவது ஏன்? - முதல்வா் மு.க. ஸ்டாலின்

தினமணி செய்திச் சேவை

ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ சமூக ஊடக பக்கத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் எனது சகோதரருமான ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? அவை உறுப்பினா்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் குறித்து அவைக்குத் தெளிவுபடுத்தவும் அரசு முன்வர வேண்டும்.

எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினா்களை இடைநீக்கம் செய்துள்ளது கண்டனத்துக்குரியது. உடனடியாக அவா்களது இடைநீக்கத்தைத் திரும்பப் பெற்று, முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் பிரச்னைகள் குறித்து அவா்கள் அவையில் பேசுவதற்கான ஜனநாயக உரிமை காக்கப்பட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.

‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட’ முகாமில் விண்ணப்பித்த 1,875 பேருக்கு உதவித்தொகை

வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சோதனைச்சாவடி வழியாக மணல் கடத்தல்: விவசாயிகள் புகாா்

திருமலையில் 69,389 பக்தா்கள் தரிசனம், 20,247 போ் முடி காணிக்கை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: சாட்சியம் அளிக்காமல் நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய மருத்துவா்

SCROLL FOR NEXT