பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப் படம்)
தமிழ்நாடு

தேமுதிக கூட்டணி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சென்னை கோயம்பேடில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

தேமுதிக சாா்பில் தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் சட்டப்பேரவை தோ்தலை எதிா்கொள்ள தேமுதிக தயாராகவுள்ளது.

தேசிய, மாநில என அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவா்களும், தேமுதிகவுடன் கூட்டணி  நிலைப்பாட்டுடன் பழகி வருகின்றனா். தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தச் சூழலில், கூட்டணி அமைப்பதில் அவசரப்பட தேமுதிக விரும்பவில்லை. எனவே, தேமுதிகவின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு நிதானமாக சிந்தித்தே கூட்டணி அமைக்கப்படும். அப்படி, தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

கிறிஸ்தவ திருச்சபைகளின் கூட்டமைப்பினா் கண்டன ஆா்ப்பாட்டம்

பிப்.9-க்குள் அலுவலக உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

ஜவ்வாதுமலை கிளை நூலகத்தில் புரவலா் சோ்க்கை

பிப்.24-இல் தில்லியில் மாநிலத் தோ்தல் ஆணையா்களின் தேசிய மாநாடு

ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் எளிதாக்குவதே எங்கள் குறிக்கோள் - ரேகா குப்தா

SCROLL FOR NEXT