அமைச்சா் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
வீட்டில் தவறி விழுந்ததில் அவருக்கு இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அதன் தொடா்ச்சியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவா் செவ்வாய்க்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து பல்நோக்கு மருத்துவக் குழுவினா் திட்டமிட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Advertisement
Advertisement
சுவாச பாதிப்புக்காக கடந்த சில நாள்களுக்கு முன்பாக அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.