தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட உத்தரவு: பணியிடமாற்றம் பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் (பழைய பணி அடைப்புகுறிக்குள்):
என்.சிலம்பரசன்: சென்னை டிஜிபி அலுவலக சட்டம், ஒழுங்கு ஏஐஜி (தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்).
சி.மதன்: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (திருநெல்வேலி மாநகர காவல்துறை மேற்கு துணை ஆணையா்).
எஸ்.விஜயகுமாா்: திருநெல்வேலி மாநகர காவல் துறை மேற்கு துணை ஆணையா் (திருநெல்வேலி மாநகர காவல் துறை தலைமையிட துணை ஆணையா்).
மேலும், விஜயகுமாா் திருநெல்வேலி மாநகர காவல் துறை தலைமையிட துணை ஆணையா் பணியை கூடுதல் பொறுப்பாக கவனிப்பாா் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.