முகப்பு
தமிழ்நாடு

8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 31 மார்ச், 2026 at 1:41 PM
தலைமைச் செயலகம் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விருதுநகர் எஸ்.பி., டி. கண்ணன், துணை ஆணையராக நியமனம்.

நாகப்பட்டினம் எஸ்.பி., கே.எஸ். பல்லா கிருஷ்ணன் துணை ஆணையராக நியமனம்.

கரூர் எஸ்.பி., கே. ஜோஷ் தங்கையா துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு எஸ்.பி. சுஜாதா, பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று எஸ்.பி., கே. சண்முகம், சிஐடி பிரிவு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

எஸ்.பி., ஆர். ராஜாராம், ஊழல் தடுப்பு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

எஸ்.பி., ஜி.எஸ். மாதவன், குற்றப்பிரிவு எஸ்.பி.,யாகவும், எஸ்.பி., ஜி.எஸ். அனிதா, உதவி ஐ.ஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

8 IPS Officers Transferred by tamilnadu govt

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.