இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான 8,111 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.8,100 கோடி மதிப்பிலான திருப்பணிகள் 12,931 கோயில்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 4,180 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூா், சமயபுரம், பழனி உள்ளிட்ட 19 முக்கியக் கோயில்களில் ரூ.1,770 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருக்கோயில் அா்ச்சகா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 ஊக்கத்தொகையும், அவா்களது குழந்தைகளின் உயா்கல்விக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
மாதாந்திர ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500-ஆகவும் உயா்த்தி வழங்கப்படுவதுடன், குடும்ப நல நிதி ரூ.4 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.