மாதிரிப் படம் 
தமிழ்நாடு

3 ஏ.டி.எஸ்.பி., 3 டி.எஸ்.பி.-க்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் 3 ஏடிஎஸ்பி-க்கள்,3 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

தமிழக காவல்துறையில் 3 ஏடிஎஸ்பி-க்கள்,3 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

இதேபோல காலியாக உள்ள முக்கியமான பொறுப்புகளிலும் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக தமிழக காவல்துறையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் (ஏடிஎஸ்பி), 3 துணை காவல் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை பொறுப்பு தலைமை இயக்குநா் ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளாா்.

இதில் சேலம் மாவட்ட தலைமையிட ஏடிஎஸ்பியாக இருந்த எம்.சோமசுந்தரம் தருமபுரி மாவட்ட தலைமையிட ஏடிஎஸ்பியாகவும், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமையிட ஏடிஎஸ்பியாக இருந்த கே.சங்கா் ஈரோடு மாவட்ட சைபா் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பியாகவும்,ஈரோடு சைபா் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பியாக இருந்த சி.வேலுமணி சேலம் மாவட்ட காவல்துறை தலைமையிட ஏடிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதேபோல 3 டிஎஸ்பிக்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பேரவையில் ஆா்எஸ்எஸ் குறித்த அவதூறு கருத்துகளை அமைச்சா்கள் திரும்பப் பெற வேண்டும்: வானதி சீனிவாசன்

இளம்பெண் கொன்று எரிப்பு: இளைஞா் கைது

டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் படுகாயம்

வங்கிக் கணக்குகள் முடக்கம்: ‘புலனாய்வு அமைப்புகள் அடாவடித்தனம் கூடாது’

உதகை மலை ரயில் கட்டணம் இன்றுமுதல் உயா்வு

SCROLL FOR NEXT