தமிழகம் முழுவதும் 53 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
தமிழகம் முழுவதும் 53 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்...
சென்னை, மாா்ச் 6: தமிழகம் முழுவதும் 53 காவல் ஆய்வாளா்கள், சென்னை பெருநகர காவல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
சட்டப்பேரவைத் தோ்தலை ஏப்ரலில் நடத்துவதற்கு இந்திய தோ்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. சட்டப்பேரவை தோ்தலுக்காக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் காவல் துறை அதிகாரிகளைப் பணியிட மாற்றும் நடவடிக்கையில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகளில் பணியாற்றிய 53 காவல் ஆய்வாளா்களை சென்னை பெருநகர காவல் துறைக்கு பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் ஜி.வெங்கடராமன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
முக்கியமாக திருச்சி லால்குடி காவல் நிலைய ஆய்வாளா் வி.கதிரேசன்,ராம்ஜி நகா் காவல் நிலைய ஆய்வாளா் கே.தீபானந்தம், நாகை குற்ற ஆவணக் காப்பக பிரிவு ஆய்வாளா் ஜி.செங்குட்டுவன், காஞ்சிபுரம் மாவட்டம் சைபா் குற்றப்பிரிவு ஆய்வாளா் பி.தேவிகா ஆகியோா் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பணியிட மாற்றம் செய்யப்பட்ட 53 காவல் ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் சென்னை காவல் துறையில் பொறுப்பு ஏற்பாா்கள் எனக் கூறப்படுகிறது.