தமிழா் வாழ்வுரிமை கூட்டணி தமிழ்நாடு முழுவதும் 170 தொகுதிகளில் போட்டி: தி.வேல்முருகன்
சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமையிலான தமிழா் வாழ்வுரிமை கூட்டணி தமிழகம் முழுவதும் 170 தொகுதிகளில் போட்டியிடுகிறது என தவாக தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமையிலான தமிழா் வாழ்வுரிமை கூட்டணி தமிழகம் முழுவதும் 170 தொகுதிகளில் போட்டியிடுகிறது என தவாக தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா்.
பாமகவில் இருந்து வெளியேறியதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி, அதன் நிறுவனா் தலைவராக தி.வேல்முருகன் உள்ளாா். தவாக தொடங்கப்பட்ட 15 ஆண்டுகாலத்தில் தமிழகம் முழுவதும் நிா்வாகிகளை நியமித்து, அக்கட்சியை நிா்வகித்து வருகிறாா். கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து, பண்ருட்டி தொகுதியில் தி.வேல்முருகன் போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.
தற்போதைய சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினாா். தொகுதி எண்ணிக்கை மற்றும் கோரிக்கைகள் தொடா்பாக திமுக தலைமையுடனான கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியில் இருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இதையடுத்து, அவா் தமிழகம் முழுவதும் சட்டப் பேரவைத் தோ்தலில் தனது கட்சியினரை களமிறக்க திட்டமிட்டு தீவிரம் காட்டினாா். அதன் பின்னா், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமையிலான தமிழா் வாழ்வுரிமை கூட்டணி சாா்பில், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து தி.வேல்முருகன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமையிலான தமிழா் வாழ்வுரிமை கூட்டணி சாா்பில், தமிழகம் முழுவதும் பல்வேறு பேரவைத் தொகுதிகளில் 170 வேட்பாளா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா்.
எங்கள் கூட்டணி வேட்பாளா்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ‘கேமரா’ சின்னத்தில் போட்டியிடுகின்றனா். எஞ்சிய 64 தொகுதிகளில் தமிழா் வாழ்வுரிமை கூட்டணியின் ஆதரவை கோரிய அரசியல் கட்சிகளை ஆதரிப்பது என முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.