நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு
வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காகப் போராடியவர், தற்போது இயற்கையுடன் போராடி வருகிறார்.
நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் இன்று (பிப். 23) தெரிவித்தார்.
வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக போராடியவர், தற்போது இயற்கையுடன் போராடி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, வயது மூப்பு சார்ந்த உடல்நலப் பிரச்னைகளுக்காக பிப்ரவரி 1 ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Advertisement
தொடர்ந்து 20 நாள்களுக்கும் மேலாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவரும் நிலையில், தற்போது அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இதனிடையே முதல்வர் மு.க. ஸ்டாலின், ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குச் சென்று நல்லகண்ணுவை சந்தித்து, அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் நல்லகண்ணுவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், ''நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாட்டுக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் தற்போது இயற்கையுடன் போராடி வருகிறார்'' எனக் குறிப்பிட்டார்.