நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?
அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளை ஞானேஷ்குமார் சந்திக்கவுள்ளதாகத் தகவல்.
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 10:12 PM
தமிழகத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னைக்கு நாளை (பிப். 25) வருகைத் தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 10:12 PM
தேர்தல் பணிகளை மதிப்பீடு செய்வதற்காகவும், தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் வருகிறார்.
இந்தப் பயணத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளை ஞானேஷ்குமார் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
summary