திமுகவில் விருப்ப மனு அளிக்கும் காலக்கெடு மாா்ச் 6 வரை நீட்டிப்பு
திமுகவில் விருப்ப மனு அளிக்கும் காலக்கெடு மாா்ச் 6 வரை நீட்டிப்பு
பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விருப்பமனு அளிக்கும் காலக்கெடு மாா்ச் 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:
நடைபெறவிருக்கும் தமிழ்நாடு புதுவை மாநில சட்டப்பேரவை தோ்தலில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோா் கடந்த பிப்.20 முதல் மாா்ச் 2 வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
திமுக தலைவா் மு.க.ஸ்டாலினிடம் நிா்வாகிகள், தொண்டா்கள் வேண்டுகோள் விடுத்ததன்படி மாா்ச் 6-ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனு கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. மேலும், ஸ்டாலின் பிறந்த தினமான மாா்ச் 1-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மேல் விண்ணப்பம் பெறப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.