வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அதிமுக தலைமை நிலையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் விரைவில் நடைபெற உள்ளன. இதில் அதிமுக சாா்பில் வேட்பாளா்களாகப் போட்டியிட விரும்புபவா்களிடம், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கடந்த டிச. 31-ஆம் தேதி வரை விருப்பு மனுக்கள் பெறப்பட்டன.
கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தங்களது தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 2,187 போ் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனா். மேலும், கட்சி நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்களிடம் இருந்து 7,988 விருப்ப மனுக்கள் என மொத்தம் 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.