அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை... 
தமிழ்நாடு

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை! மக்களிடம் கருத்து கேட்க முடிவு?

அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடைபெறத் தொடங்கியுள்ளன.

அந்தவகையில் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் குறிப்பாக விவசாயிகள், தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மாணவர்களிடையே கருத்து கேட்க குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADMK Election manifesto team discussion in party headquarters, chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன நாயகன் சென்சார் சான்றிதழில் தாமதம்!

குழந்தைகள் 3 - 4 மணி நேரம் டிவி / ஃபோன் பார்க்கிறார்களா? ஆபத்துகள் என்ன? தீர்வு என்ன?

நடிகர் லொள்ளு சபா வெங்கட் ராஜ் காலமானார்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வியானாவுடன் வெளியேறுகிறேன் : விக்கல்ஸ் விக்ரம்

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,280 உயர்வு! வெள்ளி விலை ரூ. 9000 அதிகரிப்பு!

SCROLL FOR NEXT