எடப்பாடி பழனிசாமி கோப்புப் படம்
தமிழ்நாடு

ஹெத்தை அம்மன் திருவிழா- எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

ஹெத்தை அம்மன் திருவிழாவையொட்டி அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஹெத்தை அம்மன் திருவிழாவையொட்டி அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்கள் தங்களின் பாரம்பரிய திருவிழாவான "ஹெத்தை" அம்மன் திருவிழாவை இன்று வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தங்கள் முன்னோர்களை நினைவுகூர்ந்து வழிபடும் இந்த திருவிழாவானது படுகர் இன மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், ஒற்றுமையையும் எடுத்துரைக்கிறது.

"ஹெத்தை' அம்மன் திருவிழாவிற்கு புரட்சித்தலைவி அம்மா உள்ளூர் விடுமுறை அளித்திருந்ததை நினைவு கூறும் இந்த வேளையில் ஹெத்தை அம்மனின் பூரண அருளால் தீமை அழிந்து, நன்மை பிறந்து, வளம் செழித்து மக்கள் யாவரும் இன்புற்று வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு சீமைகளில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகா் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இவா்கள், ஆண்டுதோறும் டிசம்பா், ஜனவரி மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடுகின்றனா்.

இதற்காக 48 நாள்கள் விரதம் இருந்து தாய்வீடான கொதுமுடி கோயிலுக்கு பாரம்பரிய உடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு அருள்வாக்கு கூறுவா்.

AIADMK General Secretary Edappadi Palaniswami has extended his greetings on the occasion of the Hethai Amman festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம்: மக்களின் கலாசார நடைமுறையை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் - சுனில் அம்பேகா்

மல்லிகைப் பூ வரத்து குறைவால் கோவையில் கிலோ ரூ.4,000-க்கு விற்பனை

மகளிா் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா

ஜனநாயகன் திரைப்பட விவகாரம்: விஜய்க்கு வாக்குகள் அதிகரிக்கும் - புகழேந்தி

வழிப்பறி, இரு சக்கர வாகனங்கள் திருட்டு: ஒருவா் கைது! 11 வாகனங்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT