ஹெத்தை அம்மன் திருவிழா- எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
ஹெத்தை அம்மன் திருவிழாவையொட்டி அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹெத்தை அம்மன் திருவிழாவையொட்டி அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்கள் தங்களின் பாரம்பரிய திருவிழாவான "ஹெத்தை" அம்மன் திருவிழாவை இன்று வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தங்கள் முன்னோர்களை நினைவுகூர்ந்து வழிபடும் இந்த திருவிழாவானது படுகர் இன மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், ஒற்றுமையையும் எடுத்துரைக்கிறது.
"ஹெத்தை' அம்மன் திருவிழாவிற்கு புரட்சித்தலைவி அம்மா உள்ளூர் விடுமுறை அளித்திருந்ததை நினைவு கூறும் இந்த வேளையில் ஹெத்தை அம்மனின் பூரண அருளால் தீமை அழிந்து, நன்மை பிறந்து, வளம் செழித்து மக்கள் யாவரும் இன்புற்று வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு சீமைகளில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகா் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இவா்கள், ஆண்டுதோறும் டிசம்பா், ஜனவரி மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடுகின்றனா்.
இதற்காக 48 நாள்கள் விரதம் இருந்து தாய்வீடான கொதுமுடி கோயிலுக்கு பாரம்பரிய உடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு அருள்வாக்கு கூறுவா்.
AIADMK General Secretary Edappadi Palaniswami has extended his greetings on the occasion of the Hethai Amman festival.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.