முகப்பு
நீலகிரியில் உறைபனி
தமிழ்நாடு

நீலகிரி, கொடைக்கானலில் உறைபனி எச்சரிக்கை!

உறைபனி எச்சரிக்கை பற்றி..

தமிழ்நாடு

நீலகிரி, கொடைக்கானலில் உறைபனி எச்சரிக்கை!

உறைபனி எச்சரிக்கை பற்றி..

Updated On : 17 ஜனவரி, 2026 at 8:44 AM
நீலகிரியில் உறைபனி
பகிர்:

நீலகிரி, கொடைக்கானலில் அடுத்த 2 நாள்களுக்கு உறைபனி காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது.

குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

ஜன. 17 முதல் 21 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

குறைந்தபட்ச வெப்பநிலை

ஜன. 17 முதல் 21 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஓட்டி இருக்கக்கூடும்.

உறைபனி எச்சரிக்கை

ஜன. 17, 18ல் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை..

இன்று (17-01-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

summary

The meteorological department has announced that frost will be observed in Nilgiris and Kodaikanal for the next two days.

முழு கட்டுரையைப் படிக்க →