விடுபட்டோருக்கு ஜன. 20 முதல் பொங்கல் தொகுப்பு!
விடுபட்டோருக்கு ஜன. 20 முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது தொடர்பாக...
பொங்கல் தொகுப்பு பெறாமல் விடுபட்டோருக்கு ஜன. 20 ஆம் தேதி முதல் மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளையொட்டி 2,22,91,710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு, வேஷ்டி, சேலை ஆகியவற்றுடன் சேர்த்து ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 8-ஆம் தேதி சென்னையில் தொடங்கிவைத்தார்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன.
பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியில் சுமாா் 50,000 கூட்டுறவுத் துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், பொங்கல் தொகுப்பு பெறாமல் விடுபட்டோருக்கு ஜன. 20 ஆம் தேதி முதல் மீண்டும் வழங்கப்பட உள்ளது.
It has been announced that those who missed receiving the Pongal gift package will be given it again from January 20th.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.