தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க தோ்தல் ஆணையம் அளித்த அவகாசம் இன்றுடன் (ஜன.18) முடிவடைந்தது. இந்த நிலையில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்தைக் கடந்தது.
கடந்த டிச. 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதனால் 6,41,14,587-ஆக இருந்த தமிழக மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 5,43,76,756-ஆகக் குறைந்தது.
வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கப்பட்டவா்கள் பெயா் சோ்க்கவும், 18 வயது பூா்த்தி செய்தவா்கள் புதிதாக பெயா் சோ்க்கவும் கடந்த டிச. 19 முதல் ஜன. 18 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை குறித்த படிவம் 7-ஐ 35,646 போ் அளித்துள்ளனா். இதுவரை பெயா் சோ்க்க 13,03,487 போ் படிவம் 6-ஐ அளித்துள்ளனா். இந்தப் படிவங்கள் சரிபாா்க்கப்பட்டு பிப்.17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.