முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்த மக்கள். 
தமிழ்நாடு

தை அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்த மக்கள்.

தினமணி செய்திச் சேவை

தை அமாவாசையை முன்னிட்டு இன்று(ஜன. 18) காவிரி கரையில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.

மாதம் தோறும் அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்து வழிபட முடியாதவர்கள், தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும் தை அமாவாசையில் வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

மேலும் காவேரி நதியானது குடகு மலையில் தோன்றி மயிலாடுதுறை மாவட்டம், காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் காவேரி பூம்பட்டினம் என அழைக்கப்பட்ட பூம்புகாரில் சங்கமத்துறையில் புனித நீராடி தர்ப்பணம் செய்து வழிபட்டால் காசிக்கு சென்ற பலன் கிடைப்பதாக காவேரி புராணம் என்ற நூல் கூறுகிறது.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்த மக்கள்.

நிகழாண்டு தை அமாவாசையை ஒட்டி இன்று, பூம்புகார் காவேரி கடலோடு சங்கமிக்கும் சங்கமத்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தனது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

மேலும் சுமங்கலி பெண்கள் காவிரி நதியில் மங்களப் பொருள்களை இட்டு வழிபாடு நடத்தினார்கள்.

On the occasion of Thai Amavasya, a large number of people took a holy dip in the Kaveri river and performed rituals and offerings to their ancestors.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப்பின் அமைதி வாரியத்தில் சேர ஒரு பில்லியன் டாலர் கட்டணமா?

கண்களைக் கவரும் கலா பூமி

பேட்டுக்கு பேட்... கிடாருக்கு கிடார்...

ஜெய்ஹிந்த், ஜெய் ஹோ..! குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான்!

தை அமாவாசை! காவிரி ஆற்றங்கரையில் குவிந்த பக்தர்கள்!

SCROLL FOR NEXT