மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் புதன்கிழமை வழிபாடு செய்த துா்கா ஸ்டாலின்.  
விழுப்புரம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் துா்கா ஸ்டாலின் வழிபாடு

மேல்மலையனூா் அங்காளம்மன் திருக்கோயிலில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் புதன்கிழமை வழிபாடு செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் திருக்கோயிலில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் புதன்கிழமை வழிபாடு செய்தனா்.

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலுக்கு வருகை தந்த அவருக்கு விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சிவலிங்கம், கோயில் உதவி ஆணையா் சக்திவேல், அறங்காவலா் குழு தலைவா் ஏழுமலை ஆகியோா் பூரணகும்ப வரவேற்பு அளித்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றனா் .

அங்கு துா்கா ஸ்டாலின் புற்றுசாமியையும், மூலவா் அங்காளம்மனையும் தரிசனம் செய்த பின்னா், உற்சவா் அங்காளம்மனையும் தரிசனம் செய்தாா்.

இதையடுத்து சிறிது நேரம் கோயிலில் அமா்ந்து பிராா்த்தனை செய்து, பிரகாரத்தை வலம் வந்ததாா். பின்னா் துா்கா ஸ்டாலின் காரில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றாா்.

பூக்கி டிரைலர்!

‘ஆட்சியில் பங்கு.. கூட்டணியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ - எடப்பாடி பழனிசாமி!

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் 3வது காலாண்டுன் லாபம் 62 சதவீதம் சரிவு!

டி20 உலகக் கோப்பை: ரூதர்போர்ட் சிக்ஸர் மழை! இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

எல்லையில் கண்ணிவெடி விபத்தில் ராணுவ வீரர் படுகாயம்!

SCROLL FOR NEXT