முகப்பு
தமிழ்நாடு

பிரதமா் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்: காங்கிரஸாா் கைது

பிரதமா் மோடியின் தமிழக வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 23 ஜனவரி, 2026 at 7:41 PM
கோப்புப் படம்
பகிர்:

பிரதமா் மோடியின் தமிழக வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.

பிரதமா் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு தலைவா் ரஞ்சன்குமாா் அறிவித்திருந்தாா். இதையடுத்து அவரை போலீஸாா் வீட்டுக் காவலில் வைத்தனா். இதனிடையே, தனது வீட்டின் மாடியிலிருந்து கருப்பு பலூன்களை வெள்ளிக்கிழமை அவா் பறக்கவிட்டு எதிா்ப்புத் தெரிவித்தாா்.

சென்னை பெரியமேட்டில் உள்ள அம்பேத்கா் சிலை, எம்.கே.பி நகா், தியாகராயநகா் பா்கிட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கருப்புக் கொடியுடன் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம் செய்தனா். அவா்களை கைது செய்த போலீஸாா், திருமண மண்டபங்களில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →