FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

விபி ஜி ராம் ஜி திட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டுவந்த முதல்வர்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தொடர்பாக பேரவையில் தீர்மானம்...

Updated On : 23 ஜனவரி 2026, 12:24 pm IST
முதல்வர் மு.க. ஸ்டாலின்
பகிர்:

மத்திய அரசின் விபி ஜி ராம் ஜி திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.

100 நாள் வேலைத்திட்டம் மகாத்மா காந்தியின் பெயரிலேயே மத்திய அரசு தொடர வலியுறுத்தி கொண்டுவந்த தனித் தீர்மானம் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை(MGNREGA) மாற்ற வகைசெய்யும், வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்ட மசோதா(விபி ஜி ராம் ஜி) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. எனினும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Advertisement

Advertisement

புதிய திட்டத்தின்படி, ஓராண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயா்த்தப்பட உள்ளது. ஆனால், 100 சதவீதம் மத்திய அரசு நிதி அளித்து வந்த இத்திட்டத்துக்கு இனி மாநில அரசுகள் 40 சதவீதம் நிதி அளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்த சிறப்பு தீர்மானம் இன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

வேலைக்கான வழிமுறையை மாநில அரசே வகுத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்; தேசிய ஊரக வேலை திட்டத்துக்கு மாநில செயல் திறன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

Resolution introduced against VB G RAM G in tamilnadu assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments