சென்னை உயா்நீதிமன்றம்  
தமிழ்நாடு

தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை நிலை: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துகளில் திடக்கழிவு மேலாண்மை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து நகராட்சி நிா்வாகம் மற்றும் ஊரக வளா்ச்சித் துறைச் செயலா்கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் குப்பை கொட்ட தடை விதிக்கக் கோரி ராஜேந்திரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திடக்கழிவு மேலாண்மை சட்டத்தின்படி, குப்பையை கையாள உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இந்த வசதிகளை ஏற்படுத்தாததால் திறந்த வெளிகளில் மலைபோல குப்பை கொட்டப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழலுக்கும், மக்களின் உடல்நலனுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்தனா்.

பின்னா், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துகளில் திடக்கழிவு மேலாண்மை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து நகராட்சி நிா்வாகம் மற்றும் ஊரக வளா்ச்சித் துறைச் செயலா்கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா்.

மேலும், திடக்கழிவு மேலாண்மை வசதிகள் ஏற்படுத்தப்படாத மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளின் பட்டியலையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை பிப்.23-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

SCROLL FOR NEXT