பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 17 நாள்களாக சென்னையில் போராட்டம் நடத்தி வந்தனர். பல்வேறு விதமான போராட்டங்களில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் அவர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Advertisement
Advertisement
முதல்வர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடுத்த உறுதியை ஏற்று போராட்டதை ஒத்திவைத்திருப்பதாக பகுதிநேர ஆசிரியர்களின் கூட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சுமாா் 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியா்கள் அரசுப் பள்ளியில் பணியாற்றி வருகிறாா்கள்.
சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் ஆகியவற்றை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
The part-time teachers' strike has been temporarily postponed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.