ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுபவர்கள் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ஜூலை 4, 5-ல் ஆசிரியர் தகுதித் தேர்வு! பிப். 18 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை வெளியானது தொடர்பாக....

இணையதளச் செய்திப் பிரிவு

வரும் ஜூலை 4, 5 ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்) நடைபெறும் என்ற உத்தேச அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஜூலை 4 ஆம் தேதி முதல் தாள் தேர்வும், ஜூலை 5 ஆம் தேதி 2 ஆம் தாள் தேர்வும் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும்.

இந்த டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ஆம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை இன்று(பிப். 13) வெளியான நிலையில், வரும் பிப். 18 முதல் விண்ணக்கலாம் என்றும் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 10 ஆம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Notification for the Teacher Eligibility Test has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புல்வாமா தாக்குதல் நாள்: லால் சௌக்கில் பாதுகாப்புப் படையினர் திடீர் சோதனை

வருண் சக்கரவர்த்தி முழுமையாக நான்கு ஓவர்கள் வீசியிருந்தால்... முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

பிரதமரின் புதிய அலுவலகம் சேவா தீா்த்!

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாகக் களமிறங்கும் புதிய எம்ஜி மெஜஸ்டர்!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் குல்தீப்..! முன்னாள் வீரர் கணிப்பு!

SCROLL FOR NEXT