தமிழக காவல்துறையைச் சேர்ந்த 3 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிப்பு!
குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிப்பு தொடர்பாக...
குடியரசு நாள் விழாவையொட்டி, தமிழக காவல் துறையைச் சேர்ந்த 3 காவல் துறை அதிகாரிகளுக்கு, குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குடியரசு நாளையொட்டி, ஒவ்வோா் ஆண்டும் காவல் துறையில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு மெச்சத்தக்க சேவைக்கான பதக்கங்கள், மிகச் சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கான பதக்கங்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.
நடப்பு ஆண்டு குடியரசு நாளையொட்டி, பதக்கங்களுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
துணை கண்காணிப்பாளர் குமரவேலு, துணை ஆணையர் அன்வர் பாஷா, ஐஜி மகேஸ்வரிக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேபோல், சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 21 அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, காவல் ஆணையர்கள் அனில் குமார், சரவன சுந்தர், துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட 21 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
தமிழக தீயணைப்புத் துறையில் உள்ள நிலைய அதிகாரிகள் ஆண்டவராஜ் ஆறுமுகம், சுரேஷ்குமார் பொன்னுசாமி மற்றும் தீயணைப்பு வீரர் இளங்கோவன் ஆகியோருக்கு சிறப்பாக பணியாற்றியதற்கான பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சீர்திருத்த சேவைகளுக்கான பதக்கங்கள் உதவி சிறை அலுவலர் பொன் பகவத் சிங், செல்லதுரை, சிவகாமி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
On the occasion of Republic Day, President's medals have been announced for three police officers from the Tamil Nadu Police Department.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.