நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் சேதமடைந்த சரக்கு வாகனம்.  
தமிழ்நாடு

நாமக்கல்: லாரி, சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பலி!

லாரி, சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பலியானது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

நாமக்கல்: நாமக்கல் நகரப் பகுதியில், லாரி, சரக்கு வாகனம், இருசக்கர வாகனம் ஆகியவை மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை அதிகாலை பலியாகினர்.

திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதன் பின்னால் மினி சரக்கு வாகனம் ஒன்றும் வந்தது.

நாமக்கல்-திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது முன்னால் சென்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதி, சுழன்று திரும்பியதில் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் மீது மோதியது.

அவர்கள் மூவரும் நிகழ்வு இடத்திலேயே பலியாகினர். சரக்கு வாகன ஓட்டுநரும் பலத்த காயமடைந்தார்.

அவருக்கு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சரக்கு வாகன ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதால் விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இறந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்தும், விபத்து தொடர்பாகவும் நாமக்கல் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

In an accident involving a lorry, a goods vehicle, and a two-wheeler in the Namakkal town area, three people died on the spot early Tuesday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் பனிப் புயலில் சிக்கிய விமானம்! 7 பேர் பலி

மேட்டூர் அணை நிலவரம்!

விஜய்யின் ஜன நாயகன் பட தணிக்கைச் சான்றிதழ் வழக்கு: இன்று தீர்ப்பு!

வெடிகுண்டு வீசி ரெளடி கொலை முயற்சி: ஒருவர் என்கவுன்டர்!

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT