கட்சித் தாவல் புகார்: பேரவைத் தலைவரிடம் முன்னாள் எம்எல்ஏக்கள் விளக்கம்!
ராஜிநாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவரிடம் விளக்கம்..
கட்சித் தாவல் புகார் தொடர்பாக ராஜிநாமா செய்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் பேரவைத் தலைவர் முன்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த மரகதம் குமாரவேல், எஸ். ஜெயகுமார், பி. சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு, முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இவர்கள் மீது அதிமுக அளித்த புகாரில், தகுதிநீக்கம் தொடர்பாக பேரவைத் தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
Advertisement
Advertisement
அதன்படி, அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இன்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் முன்பு ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர்.
அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Defection complaint: Former MLAs offer explanation to the Speaker
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.